மனித சித்திரவதைகளைக் குறைக்க ஒருநாள்!

சித்திரவதைத் தடுப்பு தினம்:

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் இன்று. உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஐ.நா. அவையினால் ஜூன் 26ம் அன்று அனுசரிக்கப்படுகிறது.

சித்திரவதை என்பது உடலால், உள்ளத்தால் வேதனையை திட்டமிட்டு ஒரு நபர் மீது பிரயோகிப்பது என்று பொருள் கொள்ளப்படுகிறது.

வரலாற்றுச் சம்பவங்களை ஆராயும்போது 15ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், சித்திரவதைகள் மிக அதிகளவில் நடைமுறையில் இருந்துள்ளது.

பின் அது படிப்படியாக குறைவடைந்து மீண்டும் இரண்டாம் உலக யுத்தத்தின் போது மிகப்பரவலாக இடம் பெறத்தொடங்கி இன்றளவும் நீடித்து வருகின்றது.

மனிதரை மனிதர் சித்திரவதை செய்யும் எண்ணம் எவ்வாறு தோன்றியது என்று ஆராயும்போது, மனிதர்களின் பரம்பரை அலகுகளை ஆராய்ந்த மருத்துவர்கள், ஒரு சில மனிதர்கள் பிறக்கும் போதே கொடூரமான இயல்புகளை வெளிப்படுத்துவதற்குரிய குணங்களை கொண்டிருக்கிறார்கள் எனக் கூறுகின்றனர்.

நவீன காலத்தில் சித்திரவதையின் நோக்கங்களாக, செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளச்செய்தல், சாதகமான தகவலையறிய தூண்டுதல், தேடப்படுகிறவரைப் பணிய வைத்தல், சரணடைய வைத்தல் எனப் பன்முகப்படுத்தப்பட்ட நோக்கங்களைக் கொண்டதாக உள்ளது.

இன்றைய காலத்தில் தேவைப்பட்ட தகவலைப் பெற வேறுவழிகள் உள்ளபோதும், அத்தகவல்களைப் பெற்ற பின்னரும்கூட சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மனிதனின் அநாகரிகத்தையே வெளிப்படுத்துவதாக உள்ளது.

உலகின் ஆறில் ஜந்து பங்கு நாடுகளில் அரச ரீதியான சித்திரவதைகள் இடம்பெற்றுவருகின்றன.

உலகம் முழுவதும் அகதிகளாக உள்ளவர்களில் 10லிருந்து 30 சதவீதமானவர்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மனிதனால் மனிதனுக்கு ஏற்படும் சித்திரவதைகள் குறையவே இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

‘சித்திரவதை’ என்ற வார்த்தையின் அர்த்தம், ஒருவருக்கு, உடல் அல்லது மனரீதியான கடுமையான வலி அல்லது துன்பம் மனமறிந்து இழைப்பது, அவரிடமிருந்து அல்லது மூன்றாம் நபருக்கு அக்கொடுமை இழைப்பது மூலம் தகவல் அல்லது ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவற்றைப் பெறுவது,

அல்லது சந்தேகத்தின் அடிப்படையிலோ அல்லது அல்லது மூன்றாவது நபரை மிரட்டுதாக அல்லது கட்டாயப்படுத்துவதாகவோ, அல்லது எந்தவொரு பாகுபாட்டின் அடிப்படையிலோ, வேறு காரணத்திற்காகவோ அத்தகைய வலி அல்லது துன்பம் அல்லது தூண்டுதல்,

ஒரு உத்தியோகபூர்வ அந்தஸ்தில் செயல்படும் ஒரு பொது அதிகாரி அல்லது பிற நபரின் ஒப்புதல் அல்லது ஒப்புதலுடன் இழைப்பதுவோ ஆகும்.

சட்டபூர்வமான அல்லது தற்செயலான நிகழ்வுகளிலிருந்து மட்டுமே எழும் வலி அல்லது துன்பம் இதில் அடங்காது.

இம்மாதிரியான சித்திரவதைக்கு, மனித உரிமை பாதுகாவலர்கள், சுதந்திரத்தை இழந்த நபர்கள், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர், கட்டாயமாக காணாமல் போனவர்கள்,

பழங்குடி மக்கள், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிபாலினவாதிகளான எல்ஜிபிடிஐ நபர் ஆகியோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, நீதி, அமைதி ஏற்பட வாய்ப்புண்டு.

1987 இல், இதே நாளில்தான் சித்திரவதைக்கு எதிரான முக்கிய கருவிகளில் ஒன்றான சித்திரவதை மற்றும் பிற கொடுமை, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனைக்கு எதிரான ஐ.நா. மாநாடு நடைமுறைக்கு வந்தது. 

Comments (0)
Add Comment