கல்விக்கு உதவும் ‘வண்ண மயிலே’ குழுவினர்!

வண்ணமயிலே என்ற பாடல் ஒவ்வொரு 10 லட்சம் பார்வையாளர்களை கடக்கும் தருணத்திலும், ஒரு குழந்தையின் ஒரு வருட கல்வி கட்டணத்தை பாடலின் குழு தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள்.

இந்த தொண்டுக்கு கல்லூரிகளில் உள்ள ரோட்ராக்ட் குழுவும் உதவி செய்து வருகிறது.

இந்த தொண்டின் முதற்கட்டமாக சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெற்ற நிகழ்வில் பாடலின் குழுவினர் சரோஜினி வரதப்பன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் ஸ்ரீ. அ.தன்யஸ்ரீ என்னும் மாணவிக்கு ரூபாய் 20,000 முதற்கட்டமாக வழங்கினர்.

இதன் தொடர்ச்சியாக பாடல் ஒவ்வொரு 10 லட்சம் பார்வையாளர்களை கடக்கும் தருணத்திலும் ஒரு குழந்தையின் கல்விக் கட்டணத்தை குழுவினர் வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.

இதனை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Comments (0)
Add Comment