சொந்த ஊர் மக்களுக்கு நன்றி!

டக்கர் பட இயக்குநர் நெகிழ்ச்சி

இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த டக்கர் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உலகம் முழுவதும் திரையில் வெளியிடப்பட்டது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் டக்கர் திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ்க்கு அவரது சொந்த ஊரான மயிலாடுதுறையில் பொதுமக்களும், ரசிகர்களும் இணைந்து மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து, நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, மயிலாடுதுறை விஜயா திரையரங்க வளாகத்தில் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ்க்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இயக்குநரைப் பாராட்டி பொன்னாடை அணிவித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய டக்கர் படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ், “உலகம் முழுவதும் ஜூன் 9ஆம் தேதி திரையிடப்பட்டுள்ள டக்கர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ல்வேறு பகுதிகளில் குடும்பம் குடும்பமாக சென்று திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை படத்திற்கு வழங்கி இருக்கிறார்கள்.

குறிப்பாக எனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் ரசிகர்களும், பொதுமக்களும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்து, வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

டக்கர் திரைப்படம் இக்கால தலைமுறைக்கு ஏற்ற வகையில் அனைவரது ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளது.

கதாநாயகனாக சித்தார்த் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

Comments (0)
Add Comment