இப்படித் தானிருக்கிறது ரயில் ஓட்டுநர்களின் வாழ்க்கை!

அண்மையில் ஒடிசாவில் நடந்த மோசமான ரயில் விபத்தும் அதைத் தொடர்ந்து அங்கு நேர்ந்த நூற்றுக்கணக்கான உயிர்பலிகளும் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

அதேசமயத்தில் ரயில்வே துறைக்குள்ளும் அதில் பணியாற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட ஊழியர்களுக்கும் தரப்படும் மதிப்பு என்ன? அவர்கள் எப்படிப்பட்ட நிலையில் தங்களை வேலையைப் பார்க்கிறார்கள். அதுபற்றிய இன்னொரு பக்கப் பார்வையை விவரிக்கும் விதத்தில் இந்தப் பதிவு.

ரயில் ஓட்டுனரை ‘Loco Pilot’ (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை ‘Asst. Loco Pilot’ (ALP) என்று கூறுவார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் 13 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள்

சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை இழக்கும் அபாயம் உண்டு. குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை அடுத்த பணிக்குத் திரும்புவதற்கு.

ஒரு ரயில் வண்டி ஓடாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது. 100 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது.

ஒரு ரயில் வண்டி பிரேக் அடித்தால் அது நிற்பதற்கு எடுத்துக் கொள்ளும் தூரம் அந்த வண்டியின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளம் தேவைப்படுகிறது, தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர்.

அதெல்லாம் சரி.. இந்த ரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா? அப்படி தூங்கினால் எப்படி கண்டுபிடிப்பது?

தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது, ஆனால் இரண்டு பேருமே தூங்க முடியாது யாராவது ஒருத்தர் விழித்து இருக்க வேண்டும்.

விசிடி (VCD) எனப்படும் விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் அவர்களை தூங்க விடாது. ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அதில் உள்ள பொத்தானை அமுக்க வேண்டும்.

அப்படி அமுக்கவில்லை என்றால், எட்டு வினாடிக்கு. பிறகு விளக்கு எரியும், அதையும் அவர்கள் உதாசீனப்படுத்தினால், அடுத்த எட்டு வினாடிக்கு சத்தமும் சேர்ந்து கொண்டு விளக்கு எரியும், அதையும் உதாசீனப்படுத்தினால், வண்டி தானாகவே நின்று விடும், ஆட்டோமேடிக் பிரேக்கிங் சிஸ்டம் (Automatic braking system) மூலம்.

ஆனால் அந்த பைலட்டுகள் வண்டியின் வேகத்தை கூட்டுவது, குறைப்பது, ஹாரன் அடிப்பது போன்ற வேளைகளில் இருந்தால், அந்த பொத்தானை அமுக்க வேண்டியது இல்லை.

இந்த காலத்தில் தான், பட்டன் போன்ற பொத்தானை அமுக்கிற வேலை, முன் நாளில் எல்லாம் ஒரு பெரிய கம்பியை இழுத்து இழுத்து விட வேண்டும். அதன் பெயர் “Deadman’s Lever”.

இன்று வரையில் ரயில்வே ஓட்டுனர்களுக்கு தனியாக கழிப்பறைகள் இல்லை. அடுத்த ஸ்டேஷன் வரைக்கும் அவர்கள் காத்திருக்க வேண்டும்.

ஒரு நிமிடம்தான் ஸ்டேசனில் நிற்கும் அடுத்து சிக்னல் விழுந்த உடன் வண்டி எடுக்க வேண்டும். 110 kmph குறையாமல் வண்டி ஓட்ட வேண்டும். நேரம் தவறாமையையும் கடைபிடிக்க வேண்டும். இதிலே இன்ஜின் பிராபளம்! டிராக்கில் ஏதேனும் பிராப்ளம்! சிக்னல் மனிதர்கள் சூசைட் என அனைத்தையும் கவனிக்க வேண்டி உள்ளது.

கேட் horn அடிப்பது, 60 செக்கண்டுக்கு vcd பிரஸ் பண்ணுவது அசிஸ்டெண்ட் எழுப்பி விடுவது உள்ளிட்டவற்றையும் அவர் செய்தாக வேண்டும்.

27 kwh கரண்டின் கீழ் வேலை, இன்ஜீன் சூடு, ராத்திரியில் வண்டியின் வேகத்தை பொருத்து கத்தி போல குத்தும் குளிர் என அனைத்தையும் சமாளிக்க வேண்டும்.

எக்ஸஸ் ஸ்பீடு போக கூடாது, டிரையின் டைமிங் மெயிண்டன் செய்வது, சிவப்பு சிக்னலை தாண்டினால் ரீமுவ்டு பிரம் சர்விஸ் என பல அழுத்தங்களும் ஓட்டுநர்களுக்கு உண்டு

இருந்தும் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும்! காடுகளில் போகும் போது செயின் இழுத்து வண்டி நிக்கும் போது யார் உதவியும் இரவு நேரத்தில் கிடைக்காது சிங்கம் புலி யானை என பலவற்றையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.

டைம் குறைந்தாலும் விளக்கம் எழுதி கொடுக்கணும். இதேதான் பகல் நேரங்களிலும்! சரக்கு வண்டி எனில் எக்ஸ்பிரஸ்க்காக லூப் லைனில் ஒதுக்குவார்கள்… அப்போ ஸ்டேசன் மாஸ்டர் ரூமுக்கு ஓட வேண்டும். அவர் வேண்டா வெறுப்பாக அனுமதிப்பார். முடியாத பட்சத்தில் வாட்டர் கேனில் தண்ணீர் இருந்தால் பொது வெளியை பயன்படுத்த வேண்டி இருக்கும்.

சரக்கு வண்டியும் 16லிருந்து 18 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்பவர்கள் உண்டு! இதில் சாப்பாடு பிரச்சனை இருக்கு! கடைகளை தேடி ஓடணும்! சாப்பிடும் நேரத்தில் வண்டி ஓட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

கண்ட்ரோலர்களோ யாருமே சாப்பிட்டார்களா சாப்பாடு வாங்கி விட்டீர்களா என கேட்பதும் இல்லை அதற்கான நேரமும் ஒதுக்குவதில்லை!

இப்படியாக தொடர்கிறது…தொடர் வண்டியின் பயணம்…

நன்றி:முகநூல் பதிவு

Comments (0)
Add Comment