பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஏற்கனவே ஒருமுறை மாற்றப்பட்டு ஜூன் 7 ஆம் தேதி அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.

கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை எதுவும் வெளியிடுமா? என்ற எதிர்பார்ப்பில் சமூக வலைதளங்களில் பலரும் பல விதமான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து தமிழகத்தில் வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment