உக்ரைனை குற்றம் சாட்டும் ரஷ்யா!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாக சண்டை நீடிக்கிறது.

உக்ரைன் பகுதிக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.  

இந்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் தாக்குதல் நடத்திய 8 ட்ரோன்களை ரஷிய வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்ததாக ரஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

5 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மூன்று ட்ரோன்கள் தடுத்து திசைதிருப்பப்பட்டதாகவும் ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ட்ரோன் தாக்குதலில் மாஸ்கோவின் பல கட்டிடங்கள் சிறிய அளவில் சேதமடைந்தன என்றும், 2 பேர் காயமடைந்ததாகவும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறியுள்ளார்.  

Comments (0)
Add Comment