பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும்!

மகளிர் ஆணையத் தலைவி டெல்லி காவல்துறையினருக்கு கடிதம்

பாஜக எம்பி பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி மகளிர் ஆணையத் தலைவி டெல்லி காவல்துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யக் கோரி, மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய நாடாளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தக்கூடாது என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என டெல்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Comments (0)
Add Comment