எழுச்சி ஊட்டும் எண்ணங்கள்…!

பல்சுவை முத்து :

ஒவ்வொரு ஆசிரியரும் தன் வாழ்நாள் முழுதும் தன்னிச்சையாகக் கற்றுணரும் தனிப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

‘என்ன செய்வாய்’ என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறருக்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும் கல்விமுறைதான் ஒரு நாட்டின் எதிர்கால தலைவர்களை உருவாக்கும்.

‘என்னால் முடியும்’ என்ற மன உறுதியை மாணவர்களிடையே உருவாக்குவதே கல்வியின் உயர்ந்த நோக்கம்.

குழந்தைப் பருவத்தில் கற்பித்து வரும் தரமான கல்வியை பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட கல்வியை விட வாழ்க்கைக்கும், சமுதாயத்திற்கும் மிக முக்கியமானது.

நம் வாழ்வில் முக்கியமானது என்னவென்றால் நாம் வெற்றி பெறுவதைவிட, மற்றவர்கள் வெற்றியடைய உதவுவதேயாகும்.

வாழ்நாள் முழுதும் அனுதினமும், நேர்மையாய், துணிவாய், உண்மையாய் உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்.

  • ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
Comments (0)
Add Comment