மல்யுத்த வீராங்கனைகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரஜ் பூஷனை கைது செய்யக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் தொடரும் நிலையில், வீராங்கனைகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் 28-ம் தேதி புதிதாக திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே பெண்களின் மகாபஞ்சாயத்து நடைபெறும் என்று பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்த விவகாரத்தில் பிரஜ் பூஷனுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தான் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக இருப்பதாகவும்  அதேபோல் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் தரப்பிலும், உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக என்றும் பிரஜ் பூஷன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments (0)
Add Comment