சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்துத் தீப்பிடிப்பு!

கேரளாவில் முதியவர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மாரோடிச்சால் என்ற பகுதியை சேர்ந்தவர் ஏலியாஸ். 76 வயதான் இவர் நேற்று காலை டீ குடிப்பதற்காக அருகிலுள்ள ஒரு தேனீர் கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது ஆயிரம் ரூபாய் விலையுள்ள சாதாரண செல்போனை சட்டைப் பையில் வைத்திருந்துள்ளார்.

தேனீர் கடை வாசலில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தபோது ஏலியாஸ் சட்டைப் பையில் வைத்திருந்த அந்த செல்போன் திடீரென சத்தத்துடன் வெடித்து, தீப்பிடித்துள்ளது.

அதிர்ச்சியடைந்த ஏலியாஸ் உடனடியாக தன்னுடைய கைகளால் தீயை அணைத்துள்ளார். தீயை உடனடியாக அணைத்ததால் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் தேனீர் கடை வாசலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காணொளி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment