மறுபடியும் ஒலிக்கும் அந்தக் குரல்!

அம்மாவிற்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத்தெரியவில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்.

அருகில் சென்று உட்காருகிறான்

அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்!

மறுபடியும் அந்தக்குரல்
ஒலிக்கிறது…

நண்பா அவள்
`எந்த சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள்?’

– நகுலன்

Comments (0)
Add Comment