தலைக்கேறிய போதையால் மர உச்சிக்கு ஏறிய போதை ஆசாமி!

பொள்ளாச்சி அருகே 100 அடி உயரமுள்ள பனைமரத்தில் ஏறி மது அருந்திவிட்டு மயக்க நிலையில் இருந்த குடிகாரனை, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் உள்ள ஆவில் சின்னாம்பாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த 100 அடி உயரமுள்ள பனை மரத்தின் மீது ஏறிய  ஒருவர் மது அருந்தியுள்ளார்.

பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் பனை மரத்திலேயே சாய்ந்து உறங்கியுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும் கீழே வலை விரித்தும் அந்த நபரை மீட்க முயன்றனர்.

அதன்பின்னர் இரும்புக்கூண்டு பொருத்தப்பட்ட கிரேன் கொண்டுவரபட்டு மேலே சென்ற தீயணைப்பு வீரர்கள் மது போதையில் பனை மரத்தின் கிளைகளில் உறங்கிக் கொண்டிருந்த அந்த நபரை லாவகமாக தூக்கி இரும்பு குண்டில் வைத்து கீழே கொண்டு வந்தனர்.

சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேல் போராடி தீயணைப்பு வீரர்கள் அந்த ஆசாமியை கீழே இறக்கியவுடன் அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் கைகளை தட்டி தீயணைப்புத் துறையினருக்கும் காவல் துறையினருக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment