கள்ளச் சாராய வேட்டையில் 1558 பேர் கைது!

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில், 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.

4,943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 வெளிநாட்டு மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.

அதோடு 218 லிட்டர் கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஓர் நான்கு சக்கர வாகனமும், ஏழு இரண்டு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரையிலும் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யட்டு 55.173 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர். அதில் 4.534 பேர் பெண்கள்.

இந்த ஆண்டு இதுவரையிலும் 2,55,078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளசாராயம் கடத்த பயன்டுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 1,077 மோட்டர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என டிஜிபி சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments (0)
Add Comment