அஜித்தின் ரசிகர்களும் அவரைப் போலவே!

அஜித் பற்றி அவரது ரசிகர் ஸ்ரீதர் சொன்னவை:

“பனிரெண்டு வருஷமா ரசிகர் மன்றத்துல சேலம் மாவட்டத் தலைவரா இருந்ததால சென்னை, பொள்ளாச்சி, கும்பகோணம், ஊட்டின்னு பல இடங்களில் பலமுறை அஜித்தை சந்திச்சிருக்கேன்.

முதல் தடவை பார்த்தப்ப கவர்மென்ட்ல வேலை பார்த்துட்டேவா இதெல்லாம் பண்றீங்கன்னு கேட்டவர், அந்த வேலையை பாதிக்காம பார்த்துக்கோங்க என்றார்.

அப்ப நான் நீதிமன்றத்துல டைப்பிஸ்டா இருந்தேன். ஒரு காலத்துல தியேட்டர் ஆபரேட்டரா இருந்த நான் அமர்க்களம் பார்த்ததுல இருந்து உங்க ரசிகராகிட்டேன்னு சொன்னேன்.

சேலம் மன்றத்து மூலமா நிறைய சமூகப் பணிகள் செஞ்சு மாவட்ட ஆட்சியர்கிட்ட பாராட்டு வாங்கியிருந்தோம். ஆனா அதுக்காக அவர்கிட்ட சிறப்புச் சலுகையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. எல்லா நிர்வாகிகளையும் ஒரே மாதிரி தான் நடத்தினார்.

நாம தான் நிறைய ஒர்க் பண்ணி ‘தல’ கிட்ட நிறைய நல்ல பேர் வாங்கியிருக்கோமே என்கிற நினைப்புல ஒருமுறை ஆளுயரை மாலை வாங்கிட்டு அவரை பார்க்கப்போனேன்.

நான் கடைபிடிக்க சொன்ன விஷயங்களை நீங்களே மீறினா எப்படினு கேட்டுட்டார். மாலை, சால்வை போடுறதை எப்பவுமே அவர் விரும்பினதில்ல.

ராஜா பட ஷூட்டிங்ல அவரை சந்திக்க ஊட்டி போயிருந்தோம். எங்களைப் பார்த்த ஷாலினி மேடம், ரசிகர்களோடு பேசணும்னு ஆசைப்பட்டாங்க. எனக்கு தெரிஞ்சு அவர் முதல் தடவையா மனைவியோட சேர்ந்து ரசிகர்களுடன் ஃபோட்டோ எடுத்துக்கிட்டது அப்பதான்.”

– எஸ்.ஸ்ரீதரன், கொமாரசாமிபட்டி, சேலம்.

Comments (0)
Add Comment