பெங்களூரை வீழ்த்தி 3-வது வெற்றியைப் பெற்ற கொல்கத்தா!

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி, 29 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 56 ரன்கள் விளாசினார். கேப்டன் நிதிஷ் ராணா 48 ரன்கள், வெங்கடேஷ் அய்யர் 31 ரன்கள், ஜெகதீசன் 27 ரன்கள் எடுத்தனர்.

பெங்களூரு அணி சார்பில் வனிந்து ஹசரங்கா, விஜயகுமார் விஷாக் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

லாம்ரோர் 18 பந்தில் 3 சிச்கர் உள்பட 34 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், பெங்களூரு அணி 179 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி 3வது வெற்றியைப் பதிவு செய்தது.  

Comments (0)
Add Comment