அறியாமையால் பறிபோன 73 உயிர்கள்!

கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ உள்ளது.

இதன் தலைமை பாதிரியாராக உள்ள பால் மேக்கன்ஜி நெதாங்கே, தனது போதனையின் போது, உண்ணாவிரதம் இருந்து இறப்பவர்கள்தான் கடவுளின் தொண்டர்கள் என கூறியுள்ளார்.

இதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து இறந்துள்ளனர். இவர்கள் எல்லாம் அருகில் உள்ள காடுகளில் மொத்தமாக புதைக்கப்பட்டுள்ளனர். சிலரது உடல்கள் புதைக்கப்படாமலேயே கிடந்தன.

இது குறித்த தகவலை உள்ளூர் தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டதும், கென்ய போலீஸார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து நடத்திய விசாரணையில், உண்ணாவிரதம் இருந்து இறந்தவர்கள் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. இவர்களின் உடல்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்

Comments (0)
Add Comment