பழனி ரோப் கார் சேவை 2 நாட்களுக்கு நிறுத்தம்!

பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்புப் பணிக்காக அடுத்த இரண்டு நாள்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப் பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.

காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப்கார் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் 2 நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் ரோப்கார் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு பக்தா்கள் மின் இழுவை ரயில், படிப்பாதையைப் பயன்படுத்தி மலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

Comments (0)
Add Comment