முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு!

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.30,000-ஆக வழங்கப்படும் என்றும், கலைஞர் நூற்றாண்டையொட்டி ஜூன் மாதத்தில் இருந்து  இந்த ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அதேபோல, மருத்துவப் படியை உயர்த்தித் தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் மேலவை உறுப்பினர்களின் மருத்துவப் படி 50 ஆயிரத்திலிருந்து 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய குடும்ப ஓய்வூதியம் மாதம் ஒன்றிற்கு ரூபாய் 12,500 என்பது, மாதம் ஒன்றிற்கு ரூ. 15,000 ஆகா உயர்த்தப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment