நடப்பு நிதியாண்டின் வருவாய் ரூ. 2.40 லட்சம் கோடி!

ரயில்வே நிர்வாகம் தகவல்:

ரயில்வே வருவாய் தொடர்பாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 2022-23 நிதியாண்டில் இந்திய ரயில்வே ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.49,000 கோடி அதிகமாகும்.

இதேபோல் 2022-23ம் ஆண்டில், சரக்கு வருவாய் ரூ 1.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும்.

பயணிகள் வருவாய் 61 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரூ.63,300 கோடியை எட்டியுள்ளது.

வருவாய் அதிகரிப்பால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வூதியச் செலவினங்களை இந்திய ரயில்வேயால் சமாளிக்க முடிகிறது. வருவாய் மற்றும் செலவின மேலாண்மையை சரி செய்ததன் மூலம் ரயில்வேயின் மூலதன முதலீடு ரூ.3,200 கோடியாக உயர்ந்துள்ளது” என்றுக் குறிப்பிட்டுள்ளது.

Comments (0)
Add Comment