ரூ. 1.14 கோடியில் குழந்தைகளுக்கான போதைத் தடுப்பு மையங்கள்!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் புதிய 17 அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் வெளியிட்டார்.

அந்த அறிவிப்புகளின் பட்டியல் இதோ:


1. 25.70 கோடி ரூபாய் செலவவினத்தில் 17,312 அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும்.

2. சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டம் உள்ளகப் புகார் குழுக்கள் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தவும் கண்காணிக்கவும் 50 லட்சம் ரூபாய் செலவினத்தில் இணையதளம் முகப்பு மற்றும் கைபேசி செயலிகள் உருவாக்கப்படும்.

3. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நவீன உயர் ரக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

4. முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்பு திட்டம் மறுசீரமைக்கப்படும்.

5. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியினை கண்காணித்து நிகழ் நேர பதிவு மேற்கொள்ள ஏதுவாக 18,573 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 17.53 கோடி ரூபாய் செலவினத்தில் திறன் கைபேசியிகள் வழங்கப்படும்.

6. குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில் 18,573 குழந்தைகள் மையங்களுக்கு 14.85 கோடி ரூபாய் செலவினத்தில் வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும்.

7. முன்னேற விலையும் மாவட்டங்களான ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 700 குழந்தைகள் மையங்களுக்கு கற்றல் திறன்களை ஊக்கப்படுத்துவதற்காக எல்இடி தொலைக்காட்சி பெட்டிகள் ஒரு மையத்திற்கு 25,000 ரூபாய் வீதம் 1.75 கோடி ரூபாய் செலவினத்தில் வழங்கப்படும்.

8. நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டாரத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் முன் பருவக் கல்வி பயிலும் 9,088 குழந்தைகளுக்கு ஸ்வட்டர், தொப்பி, காலுரை வழங்குவதோடு 68 மையங்களுக்கு தரை விரிப்பான்கள் 80 லட்சம் வழங்கப்படும்.

9. குழந்தைகள் மையங்களில் சமையலுக்கு தேவைப்படும் மளிகை பொருட்கள் மற்றும் எரிவாயு உருளைகள் அரசு மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து குழந்தைகள் மையங்களுக்கும் நேரடியாக விநியோகம் செய்யப்படும்.

10. சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படும்.

11. பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் குறித்த தரவுகளை சேமிக்கும் இணையதளம் நிறுவுதல் நிகழ்நேர கைபேசி செயலை மூலம் ஆய்வு மற்றும் கண்காணிப்பு 1 கோடி ரூபாய் செலவினத்தில் மேற்கொள்ளப்படும்.

12. குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் மகளிர் காப்பகங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நிபுணர்கள் சேவை வழங்குனர்கள் வாயிலாக மனரீதியில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்காக உரிய பயிற்சிகள் தேவையின் அடிப்படையில் 1 கோடி ரூபாய் செலவினத்தில் வழங்கப்படும்.

13. பாலியல் குற்றங்கள் அல்லாத பிற துன்புறுத்தல்கள் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 50 லட்சம் ரூபாய் நிதி தொகுப்பு உருவாக்கப்படும்.

14. சமூகப் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் 34 அரசு குழந்தைகள் இல்லங்களிலும் திறன் பலகைகள் ஸ்மார்ட் போர்டு 55 லட்சம் ரூபாய் செலவினத்தில் வழங்கப்படும்.

15. திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் குழந்தைகளுக்கான போதைத் தடுப்பு மையங்கள் 1.14 கோடி ரூபாய் செலவினத்தில் அமைக்கப்படும்.

16. தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் சென்னை மாவட்டம் ராயபுரம் சிறுவருக்கான அரசு குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் தலா 7 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

17. சென்னை சிறுமியருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் திருநெல்வேலி சென்னை மற்றும் மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லங்களில் பணியாளர் குடியிருப்பு 10 கோடி ரூபாய் செலவினத்தில் கட்டப்படும்.

Comments (0)
Add Comment