பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் வெறுப்புணர்வை பரப்புகிறது!

  • ராகுல் காந்தி

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதையொட்டி அங்கு கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கர்நாடகத்தில் பிடர் மாவட்டத்தில் தேர்தல் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, “பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பரப்பி ஜனநாயகத்தைத் தாக்குகிறது.

ஏழைகளிடம் இருந்து பணத்தை பிடுங்கி அவர்களது பணக்கார நண்பர்களுக்கு அளிக்கிறது” என்றுப் பேசினார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு சாதகமான சூழல் உள்ளதாகக் கூறிய ராகுல்காந்தி, காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்றும் 150 இடங்களை காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும் என்றும் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Comments (0)
Add Comment