அரசியல் வாழ்வில் ஆதாயம் தேடாதவர்!

தோழர் என்.வரதராஜன் நினைவுநாள்:

திண்டுக்கல் கண்டெடுத்த
திடமான தோழரே!
மார்க்சிஸ்ட் கட்சியின்
மறக்க வியலா வரலாறே!
அரசியல் வாழ்வினிலே
ஆதாயம் தேடாதவரே!
சொந்த வீடின்றி வாழ்ந்த
மார்க்சியத்தின் மகத்தான சொந்தமே!

ஆண்டுகள் பல கடந்தாலும்
ஆறவில்லையே மனமதுவும்!
ஆற்றிய பேருரைகளுமே
அகலவில்லையே செகத்திலிருந்து!
எண்ணற்ற துயருடனே
ஏங்கித்தான் தவிக்கின்றேன்!

ஏழைகளின் வாழ்வினிலே
ஏற்றங்காண உழைத்தவரே!
எளியோன் என்வாழ்வினிலே
ஒளியேற்றி வைத்தவரே!
ஓய்வினை அறியாத
ஒப்பற்றத் தலைவனே!

மண்ணைவிட்டு
மறைந்தாலும்
மனதை விட்டு மறைந்திடாத
என்.வரதராசன் அவர்களே
என்றென்றும் உமது பாதையிலே
பயணித்திடுவோம் பாட்டாளியாய்!

தோழர்.ச.கணேசன்
நகர்குழு உறுப்பினர்
சி.பி.(ஐ).எம்
மாமன்ற உறுப்பினர்
திண்டுக்கல் மாநகராட்சி

Comments (0)
Add Comment