நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் முடிவு ரத்து!

– மத்திய அரசு அறிவிப்பு

காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக விவசாயிகள், அரசியல் தலைவர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment