தொடங்கியது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்!

தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.  4, 216 மையங்களில் நடைபெறும் இந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தமிழகத்தில் 9.22 லட்சம்  மாணவர்களும் புதுச்சேரியில் 15,566 பள்ளி மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

37,798 தனித்தேர்வர்களும் 13,151 மாற்றுத்திறனாளிகளும் 2,640 சிறைவாசிகளும் இந்த 10-ம் வகுப்பு தேர்வை எழுத உள்ளனர்.

தேர்வு எழுதச் செல்லும் மாணவிகளுக்கு ஆசிரியர்களும், பெற்றோரும் வாழ்த்துச் சொல்லி அனுப்பினர்.

Comments (0)
Add Comment