மறுமலர்ச்சியின் அந்தக் காலம்!

அருமை நிழல் :

அந்தக் காலக் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் தான்.

பூங்கொத்து அருகில் கை வைத்தபடி, தளர்ந்த உடையுடன் இருப்பவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ தான்.

கலிங்கப்பட்டியில் இவருடைய தாத்தாவின் பெயர் அ.கோபால்சாமி. சுருக்கி, ‘அ.கோ’ என்று அழைக்கிற அளவுக்குப் பிரசித்தம். அவருடைய மகன் வையாபுரி.

வையாபுரிக்கு நான்கு பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஐந்தாவதாகப் பிறந்தது ஆண் குழந்தை. தாத்தா வந்து பார்த்தார். சந்தோஷத்துடன் அவருடைய பெயரே பேரனுக்கும் வைக்கப்பட்டது “வை.கோபால்சாமி’’.

தாத்தா மாதிரியே காலப்போக்கில் பெயரைச் சுருக்கி ‘வைகோ’ என்றாக்கிக் கொண்டார் பேரன்.

Comments (0)
Add Comment