பாலியல் தொல்லை: கலாஷேத்ரா பேராசிரியர் மீது வழக்கு!

சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது.

சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் கடந்த இரண்டு நாட்களாகப் போராட்டம் நடத்தினர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் மகளிர் ஆணையத் தலைவர் குமாரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

அதன்பின்னர் ஏராளமான மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளனர்.

கடந்த 2008 முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாகவும் அந்தப் புகார் மனுவில் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Comments (0)
Add Comment