மனிதர்களுக்கிடையே பாகுபாடு காட்டக் கூடாது!

நடிகர் சூரி வேண்டுகோள்

தான் கதாநாயகனாக நடித்து வெளியான விடுதலை திரைப்படத்தை சொந்த ஊரான மதுரையிலுள்ள திரையரங்கில் நடிகர் சூரி ரசிகர்களோடு அமர்ந்து கண்டு ரசித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறனுடனும் நடிகர் விஜய் சேதுபதியுடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி என தெரிவித்தார்.

ரோகினி திரையரங்கில் பழங்குடி மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சூரி, “எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்றுதான் என்பதை தெரியப்படுத்தத்தான் திரையரங்குகள் வந்தது.

நீ நான் என்ற வேறுபாடு திரையரங்கிற்கு கிடையாது” என்று கூறியதோடு, இந்த சம்பவத்திற்கு வருத்தப்படுவதாகவும் கூறினார்.

Comments (0)
Add Comment