அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்!

– சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர், நாளை முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சிகிச்சைக்கு வருபவர்கள், உடன் வருவோர், உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் என 100 சதவீதம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறினார்.

Comments (0)
Add Comment