ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க உத்தரவிட முடியாது!

 –  உச்சநீதிமன்றம் அதிரடி

பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்குமார் உபாத்தியாயா, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்னும் சிலரும் பொதுநல மனுக்களைத்  தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”இந்த விவகாரம் நாடாளுமன்ற, சட்டமன்ற அதிகார வரம்புக்குள் வருவதால் விசாரணைக்கு ஏற்கக்கூடாது” என வாதிட்டார்.

இதைப் பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம், ”இந்த விவகாரம் நாடாளுமன்ற, சட்டமன்ற அதிகாரம் வரம்புக்குள் வருவதால் விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது” என தெரிவித்து மனுக்களை முடித்து வைத்தது. 

Comments (0)
Add Comment