அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்!

– குடியரசுத் தலைவரிடம் மம்தா வேண்டுகோள்

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ளார். இதற்காக கொல்கத்தா சென்ற அவரை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, ”திரவுபதி முர்முவை ‘தங்க மங்கை’ என புகழ்ந்தார்.

அதன்பின் பேசிய அவர், “இந்தியாவில் பல்வேறு மதத்தினர், ஜாதியினர், மொழி பேசுபவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவராக உள்ள நீங்கள் அரசியல் சட்டத்தையும், நாட்டு ஏழை மக்களின் அரசியல் சாசன உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒரு பேரழிவில் இருந்து இதை பாதுகாக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment