துரிதமாக செயல்பட்டதால் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு வார விடுமுறை தினத்தன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வந்தனர்.

இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் வட்டக்கானல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அப்போது அருவியின் வடக்கு பகுதிக்கு சென்ற 30 பேர் திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

பின்னர் தகவலறிந்து வந்த வனத்துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். வனத்துறையினரின் துரித செயலால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

இதனிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Comments (0)
Add Comment