நல்லவர் என்றும் கெடுவதில்லை…!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்…

(தர்மம் …)

மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்

(தர்மம் …)

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை –
இது நான்குமறை தீர்ப்பு…

(தர்மம் …)

– 1963 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த ‘தர்மம் தலை காக்கும்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். குரல் – டி.எம்.சௌந்திரராஜன்.

Comments (0)
Add Comment