சென்னையில் 25-ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை!

இந்தியாவில் ஜி 20 மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் 2-வது கட்ட கருத்தரங்கு நிகழ்ச்சி நாளையும் (24.03.2023), நாளை மறுநாளும் (25.03.2023) ஆகிய 2 நாட்கள் கிண்டியில் உள்ள ஐ.டி.சி.கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ளது.

இதில் 29 வெளிநாடுகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

கருத்தரங்கு நடைபெறும் ஓட்டல் ரமடா பிளாசா, ஓட்டல் ஹப்ளீஸ், ஓட்டல் பார்க் ஹையாத் ஆகிய ஓட்டல்களில் தங்குகின்றனர்.

இவர்கள் தங்கியுள்ள ஓட்டல்கள், கருத்தரங்கு நடைபெறும் ஓட்டல் மற்றும் இவர்கள் செல்லும் வழித்தடங்களை சிவப்பு மண்டலமாக சென்னை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், வரும் 25-ம் தேதி வரை இப்பகுதிகளில் டிரோன்கள், இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Comments (0)
Add Comment