தேர்வு மதிப்பெண்களை வைத்துப் பிள்ளைகளை மதிப்பிடாதீர்கள்!

அன்பார்ந்த பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு!

உங்களுடைய பிள்ளைகளுக்கான தேர்வுகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.
பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.

எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களில் ஒரு கலைஞன் இருப்பான், அவனுக்கு கணிதம் தேவைப்படாது.

அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான், அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.

ஒரு இசைஞானி இருப்பான், அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.
ஒரு விளையாட்டு வீரனிருப்பான் அவனது உடல் நலனே முக்கியமன்றி பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.

பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை, எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன் என்று தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.

அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு தேர்வு மட்டுமே.

நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதைவிடப் பெரிய சவால்கள் நிறைய உள்ளன.
உன் மீதுள்ள என் அன்பு நீ தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.

என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படிச் சொல்லிப் பாருங்கள். தேர்வில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.

வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.

மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.

Comments (0)
Add Comment