மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டுகிறது பாஜக!

தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நினைவு பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய தொல்.திருமாவளவன், “சனாதன சக்திகளை எதிர்த்து எத்தனையோ போராளிகள் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். அப்படிப் பெரியாருக்கு முன்பு தோன்றிய பெரியார் தான் அய்யா வைகுண்டர். அவரது வரலாற்றை பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

மதத்தின் பெயரால் தமிழ்நாட்டில் வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சிக்கிறது. 2024-ல் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது” என்றுக் கூறினார்.

Comments (0)
Add Comment