‘முதலமைச்சர் காவல் விருது’ பெற்ற 753 காவலர்கள்!

தமிழ்நாடு காவல்துறையில் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 753 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருது அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் எவ்வித தண்டனையும் பெறாமல் பணியாற்றிய காவலர்களுக்கு 2023ம் ஆண்டுக்கான முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது.

எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், விழாவில் 753 காவலர்களுக்கு விருதுகள்  வழங்கி கவுரவித்தார்.

இதில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற பிரிவில் பணிபுரியும் 192 காவல் ஆளிநர்கள், போக்குவரத்து காவலில் பணிபுரியும் 167 காவல் ஆளினர்கள், ஆயுதப்படையில் பணிபுரியும் 91 காவல் ஆளிநர்கள்,

அதேபோன்று நுண்ணறிவு பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, சென்னை பாதுகாப்பு கப்பல் பிரிவு, உயர் நீதிமன்ற பாதுகாப்பு காவல் பிரிவு, குற்ற ஆவண காப்பகம்,

பணியிடை பயிற்சி மையம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 79 காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Comments (0)
Add Comment