உழைப்பவர் வாழ்வு வீதியிலே!

நினைவில் நிற்கும் வரிகள்:
***

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ

                                               (சிரிப்பவர்…)

உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே

                                             (சிரிப்பவர்…)

இருப்பவர் உள்ளம் திறந்திடுமா
ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா

                                             (சிரிப்பவர்…)

உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை
உள்ளதை இழந்திட சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா

                                             (சிரிப்பவர்…)

– 1961-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘சபாஷ் மாப்பிளே’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் மருதகாசி.

Comments (0)
Add Comment