பிரபாகரன் இருப்பது எங்கே?

– கடந்த ஆண்டே சொன்ன காங்கிரஸ் மூத்தத் தலைவர்

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கடந்த ஆண்டே காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருச்சி வேலுச்சாமி கூறியிருந்தார்.

தமிழக காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருச்சி வேலுச்சாமி, கடந்த ஆண்டு மே மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது…

“நந்தி கடலில் மரணமடைந்து இரவு முழுவதும் சடலமாக பிரபாகரன் மிதந்ததாக இலங்கை அரசு கூறுகிறது.

அப்படி மிதந்திருந்தால், அந்த சடலத்தின் கண்கள் மீன்களால் சிதைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அந்த சடலத்தின் கண்கள் திறந்த நிலையில் தெளிவாக இருந்தன. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

விடுதலைப் புலிகள் யாரும் தங்கள் சீருடையில் பெயரை குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அந்த பழக்கம் அவர்களிடம் இல்லை. ஆனால் இலங்கை ராணுவம் காட்டிய பிரபாகரன் உடலில் இருந்த சீருடையில் அவரது பெயர் இருந்தது.

அதனால் அது பிரகாரனே இல்லை. அந்த ஏற்பாட்டை செய்தவர்கள் ஏதோ ஒரு நோக்கத்துககாக செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இதை என்னிடம் சொன்னவரும் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கிறார். அவர் எப்போதாவது என்னை தொடர்பு கொண்டு பேசுவார்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக திருச்சி வேலுச்சாமியை தொடர்புகொண்டு கேட்டபோது, பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உறுதிபட தெரிவித்தார்.

அடுத்து என்ன நடக்கும் என கேட்டதற்கு, “யூகத்தின் அடிப்படையில் எதையும் கூற விரும்பவில்லை” என்றார்.

– நன்றி இந்து தமிழ் திசை

Comments (0)
Add Comment