500 கோல் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கிளப் ஆட்ட வரலாற்றில் 500வது கோலை அல் நாசர் அணிக்காக அடித்துள்ளார்.

அல் நாசருடன் கைகோர்த்த ரொனால்டோ

மான்செஸ்டர் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொண்ட போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப்பிற்காக விளையாடி வருகிறார்.

அல் நாசர் அணிக்காக களமிறங்கிய ரொனால்டோ முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டம் எதுவும் வெளிக்காட்டவில்லை.

இதையடுத்து கடந்த 3ம் திகதி நடந்த பாடெஹ் அணிக்கு எதிரான போட்டியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ அல் நாசர் அணிக்காக முதல் கோலை அடித்தார்.

500 கோல் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ

இந்நிலையில் நேற்று அல்-வெஹ்தாவுக்கு எதிரான சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் அல் நாசர் அணிக்காக களமிறங்கிய ரொனால்டோ ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

இந்த கோல் மூலம் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கிளப் கால்பந்து வாழ்க்கையில் 500வது கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

மேலும் இந்த போட்டியின் இரண்டாவது பாதியின் எட்டு நிமிடங்களில் பெனால்டி ஸ்பாட் மூலம் இரண்டாவது (501) கோலையும், ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் மூன்றாவது (502)வது கோலையும் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் சாதனைகளை படைத்தார்.

அத்துடன் இந்த போட்டியில் ரொனால்டோ தனது 500, 501, 502, மற்றும் 503 ஆகிய நான்கு கோல்களை அடித்து அசத்தி அல் நாசர் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி அடைய வைத்தார்.

ரொனால்டோ இதுவரை ரியல் மாட்ரிட் அணிக்காக 311 கோல்களும், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 103 கோல்களும், ஜுவென்டஸ் அணிக்காக 81 கோல்களும், தற்போது அல் நாசர் அணிக்காக 5 கோல்களும் அடித்துள்ளார்.

Comments (0)
Add Comment