தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மக்களைவையில் பேசிய தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ”பணியாளர் தேர்வு ஆணையத்தின் 2021-22ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் வெறும் 4.5 சதவீதம் மட்டுமே தமிழர்கள் என தெளிவாக புள்ளிவிரம் குறிப்பிடுகிறது.

இதேபோல், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் கடந்த ஆண்டு தென்மண்டலத்தில் நடத்திய தேர்வுகளில், தேர்வானவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கிடையாது என்பது தெரியவந்துள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

அதோடு, தமிழ் மொழியில் தேர்வுகளை நடத்துவது, தமிழ்நாட்டில் அமைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே நிறுவனங்களில் ‘ஆக்ட் அப்ரண்டிஸ்’ உள்ளிட்ட இடங்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நேரடி பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

Comments (0)
Add Comment