தமிழ் சினிமாவுக்கு காதல் படங்கள் தேவை!

நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள காதல் திரைப்படம் “காதல் கண்டிசன்ஸ் அப்ளை”. விரைவில் திரைக்கு வரவுள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய நடிகர் தயாரிப்பாளர் நிதின் சத்யா, “இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜாலியான ஒரு பீல்குட் திரைப்படம்.

இந்த படம் கோவிட் காரணமாக சிறிது தாமதமானது. ஆனால் படத்தில் நடித்த அனைவரும் இந்த படத்திற்காக தங்களது முழு ஆதரவையும் கொடுத்தனர்.

பலருடைய உத்வேகத்தாலும், உதவியாலும் இந்த படம் நன்றாக உருவாகி இருக்கிறது” என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி, “ரவீந்தர் கலைஞர்களை மதிக்கக்கூடியவர். அவருடைய இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் எனது நண்பர், அவருக்கு இதுதான் முதல் படம் என்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

நடிகர் ராதாரவி பேசும்போது, “நிதின் சத்யா, ரவிந்தர் இருவரும் எனது நீண்ட கால நண்பர்கள். நிதின் போன்ற உழைப்பாளிகளுக்கு உதவுவது அனைவரது கடமை. திரைக்கலைஞர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர் ரவீந்தர்” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்ஆர். பிரபு, ” காதல் படங்கள் இப்போது தமிழ் சினிமாவின் தேவை. தொடர்ந்து வெற்றிகரமான படங்களை எடுத்து வரும் தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் ரமேஷ், அடுத்து தோனியின் தயாரிப்பில் படம் இயக்குகிறார். அவர் திறமைசாலி, அவருக்கு எனது வாழ்த்துகள்” என்று பாராட்டினார்.

இயக்குநர் R அரவிந்த், ” புது இயக்குநர்களை வைத்து படம் எடுப்பதில் பொருளாதார சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.

அதைத் தாண்டி தயாரிப்பாளர் நிதின் சத்யா, ரவீந்தர் தொடர்ந்து புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள். இது தொடரவேண்டும்” என்று நெகிழ்ந்தார்.

Comments (0)
Add Comment