மக்கள் பணத்தை நண்பர்களுக்காக பயன்படுத்தும் பாஜக!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம்

மக்கள் வரிப்பணத்தை தங்களது கட்சி நலனுக்காக செயல்படும் நண்பர்களுக்காக பாஜக பயன்படுத்தி வருவதாக, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் பூர்பா பர்தாமன் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, ஒன்றிய பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ள வருமான வரிச் சலுகைகள் பாஜக அரசின் வார்த்தை ஜாலங்கள் என விமர்சித்தார்.

பாஜக அரசு நீண்ட நாட்களுக்கு நீடித்தால் எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்றும், எல்ஐசியின் பங்குகள் விற்கப்படும் விதம் அச்சத்தை ஏற்படுத்துகிறது எனவும் கூறிய மம்தா பானர்ஜி,

எல்ஐசி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தப்பட்ட மக்களின் பணம் பாஜகவுக்கு உதவியாக உள்ள அவர்களது நண்பர்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினார்.

Comments (0)
Add Comment