விண்வெளி மங்கை கல்பனாவை நினைவு கூர்வோம்!

வீரமங்கை கல்பனா சாவ்லாநினைவு நாள்

ஹரியானா மாநிலம் கர்னலில், 1961 ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாகப் பிறந்தாா் கல்பனா சாவ்லா.

இவருக்கு சுனிதா, தீபா ஆகிய சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரரும் உள்ளனர்.

அங்குள்ள அரசு பள்ளியில் தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய கல்பனா சாவ்லா, பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டமும், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1986-ல் கொலராடோ பல்கலைக் கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988-ல் விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

விமானப் பயிற்சியாளா் ஜீன் பிர்ரே ஹாரிசனை திருமணம் செய்து கொண்ட கல்பனா சாவ்லா, 1995-ம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தாா்.

1997-ல் விண்வெளிக்குப் பயணம் செய்யும் குழுவில் தேர்வு செய்யப்பட்ட சாவ்லா, முதல் இந்திய விண்வெளி மங்கையாக கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87-ல் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

ந்தப் பயணத்தில், சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார்.

இதன்பின்னர், 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் பயணித்த விண்கலம், 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பிப்ரவரி ஒன்றாம் தேதி பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியது.

இதில் கல்பனா சாவ்லா உட்பட 7 விண்வெளி வீரர்களும் உயிாிழந்தனா்.
வீர மங்கையை இழந்த இந்தியா, ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ம் தேதி கல்பனா சாவ்லாவின் நினைவு தினத்தை அனுசரித்து வருகிறது.

கல்பனா சாவ்லாவைக் கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் வீரதீர சாதனைப் புரிந்த பெண்களுக்குக் ‘கல்பனா சாவ்லா விருது’ தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது.

Comments (0)
Add Comment