தூய்மைப் பணியாளர்களின் பணி மகத்தானது!

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

மழைக்காலங்களில் பணியாற்றிய சென்னை மாநகராட்சி பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணியாளர்களை பாராட்டி பேசினார்.

அப்போது பேசிய முதலமைச்சர்,

* மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுக்கள். மிகுந்த மகிழ்ச்சியில் பாராட்டு விழாவில் உரையாற்றுகிறேன்.

* கொரோனாவை எதிர்கொண்டு வென்றோம், மிகப்பெரிய மழையை வென்றோம்.

* மழையே, வெள்ளமோ ஏற்படும் முன், தண்ணீர் தேங்காத சூழலை ஏற்படுத்தும் என்று உறுதியேற்று, மிகப்பெரிய சாதனைகளை அரசு செய்துள்ளது.

 * கடந்த மழை – இந்த மழையை ஒப்பிட்ட மக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டினர். அரசு பாராட்டு மழையில் நனைய காரணமே மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தான்.

* அமைச்சர் நேரு அன்பு, கோபம் இரண்டையும் பயன்படுத்தி பணியை சிறப்பாக முடிப்பார்.

* இரவு, பகல் பாராமல் அமைச்சர்கள், மேயர், அதிகாரிகள் பணியாற்றினார்கள்.

* மழைக்காலத்தில் மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது மிக மிகச் சிரமம்.

* தூய்மை பணியாளர்களின் பணி மகத்தானது.

* மக்களுக்காக பணி செய்கிறோம் என்பது அவசியம். அதனால் தான் இந்த பாராட்டு விழா.

* 2 முறை மேயராக இருந்ததால் அந்த சிரமங்கள் என்ன என்பது எனக்குத் தெரியும்.

* சம்பவம் நடந்த உடனே களத்திற்கு செல்வது தான் கருணாநிதியின் பாணி.

* 2021 பருவமழை அனுபவத்தை கொண்டு வெள்ளத் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

* மழைநீர் பாதிப்பு இல்லாமல் இருக்க தமிழக அரசு இன்னும் பல நடவடிக்கை எடுக்கும்” என முதலமைச்சர் கூறினார். 

Comments (0)
Add Comment