பதான் மாபெரும் வெற்றி: மகிழ்ச்சியில் ஷாருக்!

வசூல் சாதனை இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் கடந்த 25-ம் தேதி வெளியான படம், ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் படத்தை இயக்கி உள்ளார்.

4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வெளியான ஷாருக்கானின் புதிய படமான பதான் வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. 5 நாட்களுக்குள் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது.

இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து பேசிய நடிகர் ஷாருக்கான், “4 ஆண்டுகள் நான் ஒருநாளில் பலமுறை தன்னம்பிக்கையை இழக்கிறேன்.

ஆனாலும் பலவீனமாக இருப்பதாக உணர்ந்தால் பலமானவராக மாறலாம் என்பதை நீங்கள் எனக்கு கூறுகிறீர்கள்.

இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த ஆதித்ய சோப்ரா மற்றும் சித்தார்த் ஆகியோருக்கு நன்றி. நான் வேலை செய்யாத நேரத்தில் எனக்கு ஒரு படத்தை கொடுத்து அதில் ஒரு பகுதியாக இருக்க அனுமதித்தார்கள்.

நான் அவர்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். கடந்த நான்கு நாட்களில் நான் கடந்த 4 ஆண்டுகளை மறந்துவிட்டேன்.

நாம் எல்லோருக்கும் வாழ்க்கையில் தவறான நேரங்கள் வரும். வாழ்க்கை அப்படி தான் இருக்கும்.

நல்ல நாட்கள் வரும், மோசமான நாட்களும் இருக்கும். நிரந்தர பால்கனி டிக்கெட்டை நீ சோகமாக இருக்கும் நேரத்தில் உன்னை நேசிக்கும் நபர்களிடம் செல்ல என பெரியவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

என்னை நேசிக்கும் பல லட்சம் மக்களை பெற்றதால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, நான் சோகமாக இருக்கும்போது நான் எனது பால்கனிக்கு செல்கிறேன். நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது பால்கனிக்கு செல்கிறேன்.

கடவுள் என்னை மிகவும் ஆசிர்வதித்து இருக்கிறார். அவர் எனக்கு நிரந்தர பால்கனி டிக்கெட்டை கொடுத்திருக்கிறார்” எனக் கூறினார்.

நடிகர் ஷாருக்கான் தனது வீட்டு பால்கனியில் நின்றபடி பதான் பட வெற்றியை கொண்டாட வந்த ரசிகர்களிடம் உற்சாகத்தை பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment