பொங்கல் நாட்களில் மெட்ரோ ரெயிலில் 6.71 லட்சம் பேர் பயணம்!

– மெட்ரோ ரெயில் நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரெயிலில் நாளுக்கு நாள் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனிடையே பொங்கல் பண்டிகைக்காக விடப்பட்ட தொடர் விடுமுறையையொட்டி 13-ம் தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 464 பேர் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 21,731 பேரும், கிண்டியில் 14,649 பேரும், திருமங்கலத்தில் 13,607 பேரும், விமான நிலையத்தில் 12,909 பேரும் பயணித்துள்ளனர்.

14-ம் தேதி போகிப்பண்டிகை அன்று 1 லட்சத்து 62 ஆயிரத்து 525 பேரும், 15-ம் தேதி பொங்கல் நாளில் 1 லட்சத்து 8160 பேரும், 16- ம் தேதி மாட்டு பொங்கலில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 167 பேரும் பயணம் செய்துள்ளனர்.

நான்கு நாட்களில் மொத்தம் 6 லட்சத்து 71 ஆயிரத்து 316 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment