பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை!

உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் 

பிரியாணி செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகை என்றால் அது பாசுமதி அரிசி தான். அந்த வகை அரிசி இந்தியாவின் இமயமலை பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தான் விளைய வைக்கப்படுகிறது.

அங்கு விளையும் நீளமான, மணமுள்ள அரிசி மட்டுமே ஒரிஜினல் பாசுமதி அரிசி என கூறப்படுகிறது. ஆனால், ஒரு சில இடங்களில் செயற்கையாக அரிசிக்கு நிறமூட்டி, செயற்கை மணம் செலுத்தப்பட்டு விற்கப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்த தற்போது அரசு உணவு தர பாதுகாப்பு நிர்ணயம் புதிய விதிகளை விதித்துள்ளது. செயற்கை மணம், செயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்தி பாசுமதி அரிசி என விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. ஏனென்றால்  பாசுமதி அரிசி பேக் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும்.

அதன் விற்பனை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என ஆகஸ்ட் மாதம் முதல் இந்த தடை விதிக்கப்படுகிறது என்று உணவு தர பாதுகாப்பு நிர்ணயம் அறிவித்துள்ளது.

Comments (0)
Add Comment