மனதுக்கு மட்டும் பயந்துவிடு!

நினைவில் நிற்கும் வரிகள்:
***

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே…

(என்னதான் நடக்கும்)

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு…

(என்னதான் நடக்கும்)

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
கலங்காதே மதி மயங்காதே…

(என்னதான் நடக்கும்)

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு…

(என்னதான் நடக்கும்)

– 1960-ல் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘பணத்தோட்டம்’ திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்.

Comments (0)
Add Comment