இதுபோன்ற மனிதரை இப்போது பார்க்க முடியாது!

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், லால் பகதூர் சாஸ்திரி டெல்லியிலிருந்த காங்கிரஸ் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மாதச் சம்பளம் 40 ரூபாய் வழங்கப்பட்டது.

ஒரு சமயம் அவரது நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து அவரிடம் ரூ.25 கடன் கேட்டார்

அதற்கு சாஸ்திரி “என்னுடைய மாத சம்பளம் 40 ரூபாய். அதை வாங்கி அப்படியே என் மனைவியிடம் கொடுத்து விடுவேன். இதில் தான் என் குடும்பம் ஓடுகிறது. நான் இப்போது 25 ரூபாய்க்கு எங்கே போவேன்?” என்று கூறியுள்ளார்.

நண்பர் எமாற்றத்துடன் விடைப்பெற்றபோது, அவரது மனைவி குறுக்கிட்டு “சற்று பொறுங்கள்” என்று கூறிவிட்டு உள் அறைக்குச் சென்று 25 ரூபாயை எடுத்து வந்து அந்த நண்பரிடம் கொடுத்துள்ளார்.

அதைக் கண்டு திகைத்த சாஸ்திரி, “உனக்கு ஏது 25 ரூபாய்?” எனக் கேட்டார்.

”நீங்கள் கொடுக்கும் 40 ரூபாயில் 35 ரூபாயை வீட்டிற்காக செலவு செய்துவிட்டு, மீதம் 5 ரூபாயை சேமித்து வைப்பேன். அதிலிருந்து தான் இந்த 25 ரூபாயை கொடுத்தேன்” என்றாராம் மனைவி.

மறு நாள் காங்கிரஸ் அலுவலகம் சென்று, தனக்கு மாதம் 35 ரூபாய் சம்பளம் போதும் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்துள்ளார் சாஸ்திரி.

இதுபோன்ற மனிதரை இப்போது பார்க்க முடியாது.

– நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment