வானூட்டு தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

தென் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது வானூட்டு தீவு. உலக அளவில் இயற்கை சீற்றங்களை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக வானூட்டு தீவு உள்ளது.

சுமார் 80 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

உடனடியாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் மேடான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் சேதங்கள் பலத்த ஏற்பட்டதாக அங்குள்ள மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment